மதுரை கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில்திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்த ரவுடியான விஜய் 25 என்பவர் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரை கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த விஜய் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி விஜயை செய்தனர்.இதேபோல் பொன்மலை கம்பிக்கேட் அருகே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாகஇருந்ததாக திருச்சி மேல் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தரவுடியான சிவகுமார் என்ற முகமது ரபிக் (39) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.
