Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

  • by Senthil

திருச்சி கலெக்டரும், திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப் குமார் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல்  நேற்று வரை திருச்சி மாவட்டத்தில்  கணக்கி்ல் காட்டப்படாமல் எடுத்து செல்லப்பட்ட  ரூ.5.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர  ரூ.8.06 கோடி மதிப்புள்ள நகைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் உளள்  கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் வருகிறது. அதன்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் சென்று  பணம், நகைகளை பறிமுதல் செய்கிறார்கள்.  கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பு வந்த 100 நிமிடங்களுக்குள்  அந்த இடங்களுக்கு சென்று  பணம், நகைகளை பறிமுதல் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!