Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் விமான நிலைய ஏஐயு அதிகாரிகள் சோதனை மெற்கொண்டனர். இதில்  500 கிராம் 24 காரட் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 31.18 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6E 1008 இல் பயணிகள் இருக்கையை ஒட்டிய பக்கவாட்டு பேனலுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!