Skip to content
Home » உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

  • by Senthil

வெளிநாடுகளில் இருந்து நேற்று திருச்சி வந்த 2 விமானங்களில்  வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியை சந்தேகத்தின் பேரில்  திருச்சி  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதித்தனர்.  ஆண் பயணி, தனது  ஸ்ட்ரோலர் பேக்(இழுத்து செல்லும் பேக்)  பீடிங்கில்  ஒயர்  வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்து  பறிமுதல் செய்தனர். ஒரு  பெண் தனது உள்ளாடையில்  பேஸ்ட் வடிவில்

தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  இருவரிடமும் இருந்து 646 கிராம் தங்கம்   கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.38.7 லட்சம்.  அத்துடன்   கடத்தி வரப்பட்ட ஒரு ஐபோன் 14 ப்ரோவும்  பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!