Skip to content
Home » விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Senthil

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் CPI(M) சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!