Skip to content
Home » மகரஜோதியாக காட்சி அளித்த அய்யப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம்…

மகரஜோதியாக காட்சி அளித்த அய்யப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம்…

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒரு லட்சம் வரை பக்தர்கள் திரண்டு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து கூட்ட நெரிசலை தவிர்க்க மகரவிளக்கின் முந்தைய நாளில் 50 ஆயிரம் பேர், மகரஜோதி தரிசன நாளில் 40 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் சரியாக 6.48 மணிக்குநடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தந்தார். அந்த சமயத்தில் அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா.. சாமியே அய்யப்பா என விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!