சேலத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் கர்நாடக அரசின் ‘நந்தினி’ நெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு நிலவி வருவதால், கர்நாடகாவிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவின் பாலகங்களிலேயே வெளிமாநில நெய் விற்கப்படுவது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
