Skip to content
Home » சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து  நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் எண்ணினர்.

அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில் கடந்த 6 நாட்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 91 லட்சத்து 39 ஆயிரம் 809 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 220 கிராம் தங்கமும், 2 கிலோ 790 கிராம் வெள்ளியும், 222 அயல்நாட்டு நோட்டுகளும் 1128 அயல் நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!