Skip to content
Home » சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். பின்னர் தரிசனம் முடித்துவிட்டு பூதலூர் செல்வதற்காக மாலை 4 மணிக்கு மேல் மோட்டார் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிரே வந்த கார் மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயா படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விஜயாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு ஸ்ரீரங்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!