Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார்.

கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியும், அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வசந்த மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.அம்மனுக்கு செண்பகம், சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.தொடர்ந்து, அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு அம்மனுக்கு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைப்பெற்றது. இரவில் அம்மனுக்கு வெண்பட்டு உடுத்தி வெள்ளை சாத்தியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!