Skip to content
Home » பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்வார்கள்.மேலும் கார்,வேன் போன்ற் வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மையப் பகுதியும் தென் தமிழகத்தின் நுழைவாயிலான திருச்சி மாவட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்து

புதுக்கோட்டை மதுரை,திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை மதுரை கன்னியாகுமரி,திருநெல்வேலி,நாகர்கோயில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சீர் செய்தாலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய சிரமம் அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!