Skip to content
Home » குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

  • by Senthil

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர்களில்  ஒருவரான சங்கரய்யா இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்”

மருத்துவமனைக்கு சென்றவர்  விரைவில் நலம்பெற்று  வீடு திரும்புவார் என நினைத்தேன்.  சங்கரய்யாவின் தியாகம் பற்றி அறியாதவர்கள்   அவருக்கு முனைவர் பட்டம்  வழங்க மறுத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!