Skip to content
Home » அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

  • by Senthil

தியாகி சங்கரய்யா இன்று காலமானார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இவர்  பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் சிறை வாசனம் அனுபவித்தார்.

இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  சங்கரய்யா உடல் நல்லடக்கம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.  இந்தநிலையில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்… “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!