Skip to content
Home » திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருச்சி எம். சரவணன்,  காங்கிரஸ் விளம்பரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதற்கான  அறிவிப்பை அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து  வக்கீல் சரவணன் கூறும்போது,  என்னை காங்கிரஸ் விளம்பரக்குழு உறுப்பினராக நிமியத்த பொதுச்செயலாளர் வேணுகோபாலுக்கும்,  பரிந்துரை செய்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,  செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!