Skip to content
Home » திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அடுத்த கல்லுக்குடி குச்சுபாளையத்தை சேர்ந்த  சுமன் – அம்பிகா தம்பதியரின் 2வது மகன்  அரவிந்த்( 12 ) நரிக்குடி பகுதியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  சுமன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை   பள்ளி முடிந்து வந்த அரவிந்த்தை அதே ஊரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் இளவரசன்(28) என்பவர் உடும்பு பிடிக்கலாம் என  அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் மகன் வரவில்லை என அம்பிகா பல இடங்களில் தேடியுள்ளார்.அப்போது அரவிந்தின் நண்பர்களை கேட்ட போது இளவரசன் தான் அழைத்து சென்றார் என கூறியுள்ளனர், அம்பிகா இளவரசனிடம் கேட்டதற்கு உன் மகன் ஆற்றில் கிடக்கிறான் என கூறினாராம் இதனையடுக்கு அம்பிகா ஆற்றுக்கு  போய்  பார்த்த போது அரவிந்த் தலையில் படுகாயத்துடன்  இறந்து கிடத்துள்ளார்.

இது குறித்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .இது தொடர்பாக  இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். இளவரசனுக்கு  அவ்வப்போது மனநலம் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!