Skip to content
Home » பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி சுஷ்மிதா (15) நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் பள்ளி வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தங்களது மகள் சுஷ்மிதாவை இழந்து நிற்கும் அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விபத்தில் மற்றொரு மாணவி ராஜேஸ்வரி படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாணவி இராஜேஸ்வரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!