மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திலிருந்து
2 ஆம் தேதி மதியம் சுமார் 2.00 மணி அளவில் மொத்தம் 4 பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை 6.0மணியளவில் திருமுல்லைவாசலுக்கு நேர் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தம் பொழுது பைபர் படகில் 1.தஷ்வந்த் (20) 2.தமிழ்மணி 3.செல்வமணி ஆகிய மூவர் படகில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த பொழுது தஷ்வந்த் மீது இடிதாக்கி கடலில் தூக்கி வீசப்பட்டார் . மேற்படி காணாமல் போனவரை கடலோர காவல் குழுமம் காவலர்கள், திருமுல்லைவாசல் மீனவர்களுடன் இணைந்து கடலில் தேடி வருகின்றனர். 4 மணி நேரமாக தேடும் பணி தீவிரமாகியுள்ளது.