திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதால் மலை மீது அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்த நிலையில், வாக்குவாதம் தீவிரம் அடைந்துள்ளது.
ஆடி கிருத்திகை விழா 5 நாட்கள் விழா நடைபெற இருப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி புதுவை, ஆந்திரா கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இருந்தும் அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
