Skip to content
Home » வார்த்தைகள் வரவில்லை…தேசிய விருது குறித்து நடிகை கீர்த்தி சனோன் கருத்து…

வார்த்தைகள் வரவில்லை…தேசிய விருது குறித்து நடிகை கீர்த்தி சனோன் கருத்து…

இந்திய சினிமாவில் சாதனை படைக்கும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69வது தேசிய திரைப்பட விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. சிறந்த படத்திற்கான விருது மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் தேர்வு செய்யப்பட்டது. தெலுங்கில் சிறந்த பொழுதுப்போக்கு படமாக ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், சிறந்த நடிகராக ‘புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூன், சிறந்த இசையமைப்பாளராக கீரவாணி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த தமிழ் படத்திற்காக விருது மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ படத்திற்கு கிடைத்தது. அதேபோன்று சிறந்த நடிகைக்கான விருது ‘மிமி’ படத்திற்காக நடிகை கீர்த்தி சனோன் பெற்றுள்ளார். தேசிய விருது கிடைத்தது குறித்து நடிகை கீர்த்தி சனோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கும், எனது குடும்பத்திற்கும் இது மிகப்பெரிய தருணம். என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்த விருது குழுவிற்கு நன்றி. எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. என் மீதும், என் திறமை மீதும் எப்போதும் நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!