Skip to content
Home » செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு  அளிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில்பாலாஜியை பிற்பகலில்  ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!