Skip to content
Home » சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த மூத்த ஐயப்ப பக்தர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுலம் மாவட்டம், சங்கம்,திருப்பதி பாலம் பகுதியைச் சேர்ந்தவர் 81 வயதான ஆகுலசூர்ய நாராயணா .இவர் ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வேனில் தனது உறவினருடன் சென்று தரிசனம் செய்துவிட்டு பின்னர் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆகுல சூர்யநாராயணா இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார்.அப்போது சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை ஆதிசங்கரர் தெருவைச் சேர்ந்த 56 வயதான ஜோதிராசு ஓட்டி வந்த அரசு பேருந்து சாலையை கடக்க முயன்ற ஆகுல சூர்யநாராயணா மீது மோதி விபத்துக் குள்ளானது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆகுல சூரிய நாராயணன் பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!