Skip to content
Home » திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அந்த  ஓட்டல் உரிமையாளர், தனிப்படை பிரிவு ஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல் அளித்தார்.

அந்த தகவலின் அடிப்படையில் கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் ( 40 )என்பவரும், திருச்சி  சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானு (50) என்பவரும் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும், அச்சிறுமியை அச்சுறுத்தி மேற்படி பிரபின் கிறிஸ்டல்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக  பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ, விபசார தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக  ஒரு தொலைக்காட்சியில்  நிருபராக வேலை பார்த்து வந்ததும், தற்போது  ஒரு டுபாக்கூர்  மாதாந்திர பத்திரிக்கையில் நிருபர் என்று கூறிக்கொண்டு திரிந்ததும் தெரியவந்தது.  ரமீஜா பானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும், பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவத்துக்கு  சிறுமியின் தாயாரான நித்யாவும் உடந்தை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜா பானு மற்றும் நித்யா மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையில், மேற்படி சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு   குழந்தை திருமணம் செய்து வைத்ததும்,. பின்னர் அங்கு வாழாமல் சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.    சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வாங்கிய கடனுக்காக ரமீஜா பானுவிடம் வேலைக்கு அனுப்பி உள்ளனர். ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல் ராஜும் சேர்ந்து   கடனை அடைக்கவேண்டுமானால்  மற்ற ஆண்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என  கட்டாயய்பபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!