Skip to content
Home » தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது நடு இரவில் மர்ம நபர் ஒருவர் அறைகுறை ஆடையுடன் முகத்தை மூடி கொண்டு உறங்கி கொண்டு இருந்தவர்கள்

மீது டார்ச் லைட் அடித்து நகையை திருட முயன்றுள்ளார். அப்போது தீடீரென்று சத்தம் கேட்கவே அங்கிருந்து மெதுவாக தப்பித்து சென்று உள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக வட மாநிலத்தவர்கள் இது மாதிரி சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் நடு இரவில் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!