Skip to content
Home » சமகவை…….. பாஜகவில் இணைத்தார் சரத்குமார்

சமகவை…….. பாஜகவில் இணைத்தார் சரத்குமார்

  • by Senthil

திமுகவில் எம்.பியாக இருந்த நடிகர் சரத்குமார், அந்த கட்சியில் இருந்து வெளியேறி சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை 2007ல்  தொடங்கினார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒரு முறை எம்.எல்.ஏ. ஆனாார், அந்த கட்சிக்கு எர்ணாவூர் நாராயணன் உள்பட  2 எம்.எல்.ஏ. இருந்தனர். அடுத்த முறை எம்.எல்.ஏ தேர்தலில் அதிமுக கூட்டணியில்  சரத்குமார் மட்டும் திருச்செந்தூரில் போட்டியிட்டார் ஆனால் தோற்றுப்போனார். பின்னர் அந்த கட்சி தேய்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில் இன்று சரத்குமார், தனது சமகவை பாஜகவுடன் இணைத்து விட்டார்.  சென்னையில் நடந்த சமக கட்சி கூட்டத்தில்  இந்த முடிவை அவர் அறிவித்தார். இந்த கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர்.  மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். சரத்குமார் எடுத்த நல்ல முடிவு இது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.  ஏற்கனவே இவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கரு. நாகராஜன் ஏற்கனவே பாஜகவுக்கு சென்று இன்று  முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.  சரத்குமாரின் முடிவை அண்ணாமலை வரவேற்றுள்ளார்.  சரத்குமார் தமிழ்நாட்டில் அடைத்து வைக்க விரும்பவில்லை. அவரது பணி தேசியத்துக்கு தேவைப்படுகிறது என்று  கூறினார். வருங்கால  இளைஞர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக சரத்குமார் கூறி உள்ளார்.  அத்துடன் காமராஜர் போல  பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என்றும் சரத்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!