Skip to content
Home » தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

  • by Senthil

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உங்களது பணி எப்படி இருக்கிறது?

பதில்: விளையாட்டு துறைக்கு முதல்வரிடம் பல கோரிக்கை வைக்க உள்ளோம்.

25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி

உள்ளோம் – விரைவில் இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு விரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்.

கேள்வி: தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள்?

பதில்:  அந்த இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்யத்தான் வந்திருக்கிறேன். விரைவில் அதுபற்றிய  விபரங்களை கூறிகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் செங்கிப்பட்டி புறப்பட்டு சென்றார்.  பேட்டியின்போது அமைச்சர்கள் கே.என். நேரு,  மகேஷ் , மேயர்கள் அன்பழகன்(திருச்சி, சண் ராமநாதன்(தஞ்சை), எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், திருவையாறு  துரை.சந்திரசேகரன் மற்றும்  திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!