Skip to content
Home » வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி)  காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திர ஹாரம், வயிர 3  அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!