Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி, திருவானைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் ( 21) இவர் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதே பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மேல கொண்டையம்பேட்டை சேர்ந்த அரவிந்தன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!