Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் சோதனையிட்டு பார்த்தபோது பண்டல் பண்டலாக ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொண்டு செல்வதற்கான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.எடுத்து மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கந்தவேல் திருவரங்கம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான போலீசார் வியாபாரி முருகானந்தத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!