Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

  • by Senthil

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குலாம் சார்பில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும்

மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே கொடிமரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!