Skip to content
Home » ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Senthil

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.

     அதை தொடர்ந்து  பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார். அவர்  ஹெலிகாப்டரில் இருந்து   இறங்கி காரில்ஸ்ரீரங்கம் வீதிகளில் வந்தபோது அவருக்கு ஸ்ரீரங்கம்  மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், வாழ்த்து முழக்கமிட்டும் வரவேற்றனர். காரில்  கதவை திறந்தபடி நின்று கொண்டே வந்த பிரதமர் மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தார்.  பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்

கைகளை  அசைத்தவாறு வந்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திய பிரதமர்,  அங்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு  கம்ப ராமாயண பாடல்களை கேட்டார். பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் கைகளை  அசைத்தவாறு வந்தார்.  பின்னர்  கோயிலில் 1.மணி நேரம் 40 நிமிடம் தரிசனம் செய்து விட்டு  ஹெலிகாப்டரில்  ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!