Skip to content
Home » தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு  வரவேற்கத்தக்கது. சாமானியர்களின் நம்பிக்கையை  உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  தேர்தலில் நேர்மையை  இது உறுதி செய்யும்.’ என கூறி உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வலைதள பக்கத்தில், பிரதமர் மோடியின்  ஊழல் கொள்கைகளுக்கு இதுவும் ஒரு சான்று. லஞ்சம் பெறும் ஒரு ஊடகமாக இதை  பாஜக மாற்றி இருந்தது என தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பாக கருத்து பதவிவிட்டுள்ளார்.  இது போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதை வரவேற்று உள்ளார்.

தேர்தல் சுதந்திரமாக நடக்க இது உதவும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!