Skip to content
Home » வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த ஸ்டிக்கர் தங்களின் வாகனங்களில் ஓட்டுகின்றனர். குறிப்பாக பலரும் நம்பர் பிளேட்டுகளில் இந்த ஸ்ட்டிக்கரை ஒட்டுகின்றனர். இது விதிமீறலாகும். எனவே வாகனங்களின் முன்பகுதி மற்றும் நம்பர் பிளேட்டுகளில் இத்தகைய ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மே 2ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு  வந்தது. முதல்முறை விதிமீறினால் ரூ.500, 2-வது முறை விதிமீறினால் ரூ.1500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்துகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி போலீஸ், பாதுகாப்புத்துறை என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபாரதம் விதிக்கப்படும். மேலும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!