சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ், போட்டியின் போது தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், சோகத்திலும் பெருந்தன்மையாக மாணவர் ஹரீஷின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்துள்ளனர்.
