பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து வருகிறது அதில் ஒரு அங்கமாக ASER ( ANNUAL STATUS OF EDUCATION REPORT ) நிறுவனத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது முதல் 18 வயது வரை பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணியை துவங்கியுள்ளது . இதற்கான துவக்க விழா 19 ஆம்
தேதி நடைபெற்றது. நிகழ்வில் கிறிஸ்டியன் கல்வி நிறுவனம் மற்றும் டான் அறக்கட்டளையின் நிறுவனர் Dr..M.கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்கள் செயலர் Dr..C.மித்ரா முன்னிலை ஏற்றார்கள் . ASER நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர் நந்திதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆய்வை மேற்கொள்ளும் தன்ஆர்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது . 23 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 60 கிராமங்களில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களை அவர்களின் வீட்டிலேயே சென்று ஆய்வு செய்ய உள்ளார்கள். நிகழ்வில் டான் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் கபிலன் ஒருங்கிணைப்பாளர் கீதாலட்சுமி மற்றும் மூக்காயீ , ASER நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்