Skip to content
Home » பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள தூய வளனார் உலகளாவிய பள்ளியில் LKG முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்  438 மாணவர்கள் தங்களது சேமிப்பு பணமான ரூ.25,000த்தை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வழங்கினர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து மாணவ மாணவிகளையும் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமர வைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவ,மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:

பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளந்தளர்களாகிய உங்கள் மனதில் தோன்றியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். சிறுதுளி பெருவெள்ளம் என்ற வாக்கின்படி, பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் உதவியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் உங்களை வாழ்வில் சிறந்தவர்களாக உருவாக்கிட மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  மஞ்சுளா, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சின்னதுரை, தூய வளனார் உலகளாவிய பள்ளி முதல்வர் சா.ஆனந்த் விமல்ராஜ், பள்ளி மேலாளர் அருட்சகோதரி. செல்வாமேரி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!