Skip to content
Home » தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில்  பள்ளிகளுக்கு  ஆண்டு  இறுதித் தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை  விடப்பட்டுள்ளது.. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் முடிவு இந்தியா முழுவதும் ஜூன் 4-ந்தேதி  வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடைகாலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!