சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில்கன்னியாகுமரியில் காணலாம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழும்.இந்த அபூர்வ காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி இன்று கன்னியாகுமரியில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கன்னியாகுமரி விழாக்கோலம் பூண்டுள்ளது.