சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இன்று (செப்.2) தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
