Skip to content
Home » அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்….. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Senthil

 அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆதி சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என மனுதாரர் கூறியதற்கு, தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறினால்  பிரதமரிடமே போய்  செல்லுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டனர். தொடந்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!