Skip to content
Home » திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தங்கமணியை பணப்பிரச்சனை தொடர்பாக அவரது மாமனார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு மற்றொரு 3 வது மகளான ரித்திகா, ஒன்றரை வயது மகன் லஜித் ஆகியோருடன் மாயமானார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் தான் இன்று காலை அவரது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். இதையடுத்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பின் முதலில் தங்கமணி பி்ன்னர் குழந்தைகளின்  உடல்களை மீட்டனர். தனது உடலில் குழந்தைகளை துண்டால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தங்கமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!