Skip to content
Home » மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

  • by Senthil

இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே  இந்திய கடல் எல்லையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். கைதான 9 பேரும்  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி சிங்கள ராணுவம் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து சிங்கள ராணுவம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து மத்திய அரசு , இலங்கையை எச்சரிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!