Skip to content
Home » தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில் வருகிற 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் – சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என அந்த கருத்து கணிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.

இந்த கருத்து கணிப்பின் படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 52% வாக்குகளையும் அதிமுக கூட்டணி 23% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 19% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக இடம்பெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கேரளாவில் இந்தியா கூட்டணி மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என ஏபிபி செய்தி நிறுவனம் – சி-வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது என கருத்து கணிப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு இந்தியா கூட்டணி 43.4% பாஜக கூட்டணி 21.2% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!