Skip to content
Home » தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர் மாவட்டம் தலைவர் சிவா தலைமையில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில்,கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.தமிழக வெற்றிக் கழகம்

திருமானூர் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் திருமானூர் மேற்கு ஒன்றியம் மாவட்ட தலைவர் M. சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் சேகர் மற்றும் க. முரளி, கி. ராஜ்குமார், சு. பாலாஜி, த. பழனி, முருகன், ஜெ. பெருமாள், ர. ராம்கி, க. கரும்பாயிரம், ப. கருப்பையா, பாலு, அருண், ராஜி, மு. மோகன், அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!