Skip to content
Home » சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Senthil

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம் அறுக்கும் இயந்திரம், ரப்பர் படகு, பெரியசுத்தியல்,ஆங்கர், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுடன் மீட்பு படையினர் சீர்காழியில் முகாமிட்டுள்ளனர்.

இதில் 30 பேர் கொண்ட குழுவினர் தரங்கம்பாடி பகுதிக்கும், 40 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியிலும் தங்கி பேரீடர் மீட்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!