Skip to content
Home » முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது ஆர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் கவியரசனும், ஆர்யாவும் கடந்த தீபாவளி பண்டிகை அன்று ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று தஞ்சையை அடுத்த வீரமரசன்பேட்டை கிராமத்தில் திருவிழாவை காண கவியரசனும், ஆர்யாவும் தனித்தனியே வந்திருந்தனர். அப்போது 2 பேரும் சந்தித்துள்ளனர். அப்போது என்னை ஞாபகம் இருக்கிறதா என்று தீபாவளி பண்டிகை அன்று நடந்த சம்பவத்தை ஆர்யா சொல்லி உள்ளார். இதனால் ஆர்யா மீது கவியரசனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கவியரசன், ஆர்யாவை பைக்கில் அழைத்துக் கொண்டு வயலூர் பகுதியில் உள்ள வயல்காட்டிற்கு சென்றார். பின்னர் இருவரும் மது அருந்தி உள்ளனர். இதற்கிடையில் கவியரசன் தனது நண்பர் அழகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் அவரும் அங்கு வந்தார்.

அப்போது முன்விரோதத்தை மனதில் கொண்டு கவியரசனும், அழகசேனும்  ஆர்யாவை சரமாரியாக  கொடுவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஆர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடபட்ட கவியரசன்,  ஆழகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!