Skip to content
Home » தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது கணவர் படைவெட்டி அம்மன் கோவில்  தெருவை சேர்ந்த கவுசி சரிஃப். இவர்களின் குழந்தைகள் சுஹைனா (12), அக்பர் சாஹிப் (8), அல்மாஸ் பேகம் (7).

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் வீட்டிலிருந்து குழந்தைகளுடன் பல்கிஸ் பேகம் விசிறிக்காரத் தெருவில் உள்ள தனது அப்பா வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது அம்மா ரமீஜா பீவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 2ம் தேதி மீண்டும் தன் கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறி ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி வீட்டுக்கு வரவில்லை என்று கவுசி சரிப் மாமனார் முகமது இப்ராஹிமிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முகமது இப்ராஹிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளை தேடியுள்ளார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் முகமது இப்ராஹிம் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!