Skip to content
Home » தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து  இன்று காலை  தஞ்சை  நோக்கி சென்று கொண்டிருந்தது.  டிரைவர் சண்முகம்  பேருந்தை ஓட்டினார். அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில்  பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் ஐயோ, அம்மா என அலறினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீசார்,  தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் தஞ்சையை  சேர்ந்த லட்சுமி (வயது 50 ) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து  அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!