தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சின்ன பாண்டி (40), ராணி (40), ஞானம்மாள் (60), பாக்கியராஜ் (62) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சந்தோஷ் செல்வத்துக்கு மொட்டையடிக்க நேற்று இரவு ஊரில் இருந்து டவேரா காரில் புறப்பட்டனர்.
இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ராணி, சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 7 பேரையும் 108 ஆம்புலென்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்டு போலீஸார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இவ்விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.