Skip to content
Home » தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

  • by Senthil

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்தசரவணக்குமார்,  கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்  திண்டுக்கல்  மாநகராட்சி ஆணையராக  இருந்த ஆர். மகேஸ்வரி  தஞ்சைக்கு மாற்றப்பட்டார். அவர் இன்று  தஞ்சை மாநகராட்சி ஆணையகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர்  ஏற்கனவே தர்மபுரி, காஞ்சிபுரம் கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்   பணியாற்றி உள்ளார்.

ஆணையகராக பதவியேற்ற மகேஸ்வரி கூறும்போது,  தஞ்சையை  சிறந்த மாநகராட்சியாக்க  பாடுபடுவேன். தஞ்சையில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும். நகரை சுகாதாரமாகவும், அழகாகவும் உருவாக்க  பொதுமக்கள் மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!