கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில்(லெமூரியா கண்டத்தின் பெயரில் சூட்டப்பட்ட பெயர்). இது தற்போது சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.இந்த கடற்கரைக்கு திருச்சி தனியார் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றனர். இன்று காலை 10 மணி அளவில் 10 பேர் கடலில் இறங்கி குளித்தபோது பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சையைச் சேர்ந்த மாணவி சாருகவி (24),
நெய்வேலியைச் சேர்ந்த மாணவி காயத்ரி (25),
ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (24),
திண்டுக்கலைச் சேர்ந்த ப்ரவீன் (23),
குமரியைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.